ஒரு நடுத்தர வயது தம்பதியினர் ஒரு பெரிய ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அவர்கள் அறையை காலி பண்ணும் நேரத்தில் மானேஜர் அந்த அறைக்கே வந்து ஹோட்டல் பில்லை நீட்டினார்.
பில் தொகையைப் பார்த்தான் கணவன். 3 யிரம் ரூபாய் என்று இருந்தது. அவனுக்கோ ஒரே ஆச்சரியம்.. இவ்வளவு தொகை எப்படி வரும்? என்று சீறினான் கணவன்.
அறை வாடகை இவ்வளவு, சாப்பாடு பில் இவ்வளவு என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கணக்கு சொன்னார் மானேஜர்.
‘யோவ்.. என்னய்யா விளையாடுறீங்களா? இங்கே தங்கியிருந்த நான்கு நாட்களும் சாப்பாடு வெளியேதான் சாப்பிட்டோம்? சாப்பிடதா சாப்பாட்டுக்கு எப்படிய்யா பில் போடுவே’ என்று மிரட்டினான் கணவன்.
“விவரம் தெறியாமல் கத்தாதீங்க சார். எங்க ஹோட்டல் விதிப்படி இங்கே அறை எடுத்து தங்கறவங்களுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு தயாராக இருக்கும். நீங்கள்தான் சாப்பாட்டு நேரத்துக்கு வந்து சாப்பிடனும். நீங்கள் சாப்பிட்டாலும் சரி, சாப்பிடாவிட்டாலும் சரி பில் போட்டுவிடுவோம். சாப்பிடாதது உங்கள் தப்புதான் சார்..” என்று அமைதியாக பதில் சொன்னார் ஹோட்டல் மானேஜர்.