sex stories tamil பள்ளி கல்லூரி காலங்களை சிலர் மறக்கமுடியா வசந்த காலம் என்பார்கள். சிலர் ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே என்று பாடல் பாடி பழைய நினைவுகளில் மூழ்கி நிகழ் கணத்தை மறந்தே விடுவார்கள். சிலர் எனக்கு மட்டும் காலத்தை மாற்றும் சக்தி கிடைச்சா ஸ்கூல் காலேஜ் லைஃபே போதும்துனு இருந்திடுவேன். இன்னும் டெக்கீஸ் லெவல் ஆன்ட்ராய்ட் ஆந்தைகள் டைம் மெஷின்ல ஏற் ஸ்கூல் காலேஜ் டைஸுக்கு திரும்ப திரும்ப போயிட்டு வரணும் போல இருக்கு என்று புலம்பி கொண்டிருப்பார்கள். ஆக அனைவருக்கும் அந்த பருவ காலத்தின் மேல் என்ன பற்றோ பக்தியோ ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது.
அந்த பருவத்தில் தான் நாம் எதிர்காலம் பற்றிய கவலையின்றி அன்றைய தினத்தில் நிகழ் கால கணங்களை ரசித்து வாழ்ந்திருக்கிறோம். கடந்த கால கவலைகளும் நம்மை காயப்படுத்த முயல வில்லை. ஒவ்வொரு நாளையும், பொழுதையும் அணுஅணுவாய் ரசித்து மகிழ்ந்திருக்கிறோம். நண்பர்களோடு நெருங்கிய உறவினர்களோடு இரவு பகல் பாரமால் உறவாடி மகிழ்ந்திருக்கிறோம். இன்று அவையெல்லாம் மறக்கமுடியாமல் மீண்டும் அந்த வாழ்வை மீட்டெடுக்க முடியமா என்று யோசித்து கொண்டிருக்கிறோம். இன்றும் அதே பூமி, அதே காற்று, அதே காலை மாலை பொழுதுகள் ஏன் நம்மால் நிகழ்காலத்தில் நிலைநிறுத்தி நிம்மதியை தேடிக் கொள்ளமுடியவில்லை. இயற்கை சூழலும் கால மாற்றத்தில் கற்பை இழந்து மாசு பட்டிருப்பதை மறுக்கவில்லை. நாம் அதற்குள் போகவேண்டியதில்லை.