கங்கா யமுனா சரஸ்வதி – 3

0
173
கோபால்

அனைவரும் சந்தோஷமாக வீட்டுக்கு கிளம்பினோம்..

நைட்டு விஷ்ணு என் ரூமுக்கு வந்தான்..

அப்பா உங்க செல்போன் இன்னைக்கு ராத்திரி மட்டும் வச்சிக்கவானு கேட்டான்..

இதுவே ராஜாவா இருந்திருந்தா.. என்கிட்ட கேக்காமலயே அவன் பாட்டுக்கு வந்து என் செல்போனை எடுத்துட்டு போயிட்டே இருப்பான்..

விஷ்ணு நல்ல பையன்..

நானும் ஏன் எதுக்குனு கூட கேக்காம அவகிட்ட என் இன்னொரு செல்போனை எடுத்து கொடுத்தேன்..

விஷ்ணு சந்தோஷமாக செல்போனை அனைத்துக் கொண்டு அவன் படுக்கை அறைக்கு ஓடினான்..

ராஜாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே படுக்கை அறை தான்..

தனி தனி பெட்.. சின்ன வயசில இருந்தே.. இரண்டு பேரும் ஏதோ ரூம்மெட்ஸ் மாதிரி ஒன்னா தான் படுப்பானுங்க..

நல்ல ஒற்றுமை..

நான் சென்று அவர்களுக்கு குட் நைட் சொல்லி விட்டு வரலாம் என்று சென்று அவர்கள் ரூமை எட்டி பார்த்தேன்..

ராஜா இன்னும் அந்த வீடியோ கேமை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்..

விஷ்ணு படுக்கையின் ஒரு மூலையில் திரும்பி படுத்தபடி என் மொபைலை வைத்து ஏதோ பண்ணிக் கொண்டிருந்தான்..