கங்கா யமுனா சரஸ்வதி – 4

0
329
மொபைல்

செம அதிசயங்க.. யார் யாருக்கோ கேரக்டர் ரோல் குடுத்து இந்த கதையை எழுதுறாங்க..

ஒரு அஃரினை பொருளான எனக்கும் இந்த கதையில ரோல் குடுத்து இந்த கதையை என் மூலமா ஒரு எபிசோட ஓட வச்சிருக்காங்கன்னா.. நம்ம எழுத்தாளர் வந்தனா விஷ்ணு மாதிரி இந்த உலகத்துல யாருமே ஒரு உயர்ந்த மனுஷங்க முடியாதுங்க..

சரி சரி.. என்ன வச்சி ஒரு ராத்திரி முழுசும் யமுனாவும்.. விஷ்ணுவும் என்ன மெசேஜ் பண்ணிக்கிட்டாங்க.. என்ன என்ன சிலுமிஷமா பேசிக்கிட்டாங்கனு பார்க்கலாமா?

எல்லாரும் பொண்ணு பார்த்துட்டு வந்த அன்னைக்கு ராத்திரி.. விஷ்ணு அவன் அப்பா கோபால் ரூமுக்கு போனான்..

அப்பா.. எனக்கு நைட்டு உங்க மொபைல் வேணும்னு கோபால்கிட்ட கேட்டான்..

எந்த தயக்கமும் இல்லாம.. இந்தாடானு சொல்லி.. கோபால் பாக்கெட்ல இருந்து என்ன எடுத்து அவன்கிட்ட நீட்டினாரு..

விஷ்ணு என்னை அப்படியே சந்தோஷத்துல கட்டி அனைச்சிகிட்டு அவன் ரூமுக்கு ஓடினான்..

பெட்ல போய் படுத்தான்..