மங்கையரின் மன்மத தேசம் – தமிழ் செக்ஸ் கதை

0
10

சென்ற பகுதியின் தொடர்ச்சி..

கலவி மாளிகை! மண்டபத்து மன்மதன்!

கோட்டைக்குள் நுழையும் முன்பே, கலவி நாட்டு கரிகாலனை சுவை பார்த்துவிட்ட ஆழப்புழையாள், மிகுந்த உற்சாகத்துடன் கோட்டையை நோக்கி தன் குதிரை செலுத்தினாள். பழங்கால கோட்டையாக இருந்தாலும் அது மிகவும் கம்பீரமாகவே கல் வேலைப்பாடுகளுடன் இருந்தது.

கோட்டையைச் சுற்றிலும் காவல் பலமாக இருந்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரிய அளவில் பாதிப்பு இருந்ததாகத் தெரியவில்லை. கோட்டையின் சுவர் ஏறி கள்வர்கள் வராமலிருக்க கூர்மையான கண்ணாடி துண்டுகளை கற்களாக பதித்து இருந்தனர்.

அதனுடன் கோட்டையை சுற்றி வீரர்கள் எந்த நேரமும் கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாப்பு பணியை செவ்வனே செய்துக் கொண்டிருந்தனர். அவர்களை அத்தனை பேரையும் தாக்கி கோட்டைக்குள் செல்வது சற்று சிரமமான காரியம் என்பது ஆழப்புழையாளுக்கு தெளிவாக தெரிந்திருந்தது.

கோட்டையின் பிரதான வாசல் வழியாக குதிரையை மெதுவாக நடத்திச் சென்ற ஆழப்புழையாளை கோட்டையில் காவலுக்கு இருந்த காவலன் நிறுத்தி, “பெண்மணியே, தாங்கள் யார்?. எங்கே செல்ல வேண்டும்? என்று பாதுகாப்பாளை பார்த்து விவரம் சொன்னால் உள்ள செல்ல அனுமதி தருவார்கள்” என்று பணிவாக சொன்னான்.