சினிக்கூத்து – 01

0
139

இன்று தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் நானும் ஒருவன். சூப்பர் ஸ்டார்கள் முதல் புதுமுகம் வரை என் படத்தில் நடிக்க ஆவலாக இருக்கின்றனர். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துக்கொண்டு இருக்கும் ஒரு ரேஸ் குதிரை. என் பெயர் ஆர்.ஜே.சூர்யா. அப்பன் ஆத்தா வைச்ச பெயர் சூர்யநாராயணன். சினிமாவுக்காக ஆர்.ஜே. சூர்யா. பத்து வருடமாக சினிமாவில் இருக்கின்றேன். இதில் முதல் ஐந்து வருடங்கள் உதவி இயக்குனராகவும் இறுதி ஐந்து வருடம் இயக்குனராகவும் இருக்கின்றேன். உதவி இயக்குனராக வாழ்ந்த காலங்களில் நான் பட்ட அவமானங்கள் பல. அதனாலோ என்னவோ எனது உதவியளர்களிடம் எனக்கு தனி அன்பு. அவர்களிடம் எனக்கு தனி மரியாதை.

என்னிடம் பத்து உதவியாளர்கள். ஐந்து பேர் சீனியர்ஸ். ஐந்து பேர் ஜூனியர்ஸ். சீனியர்ஸின் வேலை படப்பிடிப்புத் தளத்தில் எனக்கு உதவியாக இருப்பது. சில காட்சிகளை அவர்களே இயக்கவும் செய்வார்கள். மற்றைய ஐவர் கதாசிரியருடன் இணைந்து கதையையும் என்னுடன் இணைந்து திரைக்கதையையும் வசனகர்த்தாவுடன் இணைந்து வசனத்தையும் செதுக்குவது. இந்த செக்சனில் போதிய பயிற்சியின் பின்னரே அவர்கள் படப்பிடிப்புதளத்தில் அனுமதிக்கப்படுவார்கள். சிறந்த திரைக்கதையே ஒரு படத்தின் வெற்றிக்கு ஆணிவேர். அதுவே என் வெற்றியின் இரகசியமும் கூட.